Thursday, 16th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டத்தில் மூலிகையின் சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்குகிறது. கொல்லிமலை பகுதியில் உள்ள விவசாயிகள் மிளகு, காப்பி, நெல் பயிரிட்டுள்ளனர்.
இப்பகுதியின் விவசாய நிலத்தில் விவசாயிகள் தங்களின் குடும்பத்திற்கு தேவையான ஐ.ஆர்.20 ரகத்தின் நெல் அதிகயளவில் பயிரிட்டுள்ளனர். இங்குள்ள பழங்குடியின மக்கள் பலா, வாழை, அண்ணாச்சி, மிளகு, நெல், மரவள்ளி கிழங்கு, சிறு தானியங்கள் பயிரிட்டு வசித்து வருகின்றனர்.
மேலும் கொல்லிமலையில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்டுள்ளனர். கொல்லிமலையில் வெண்டலப்பாடி, சேலுார் நாடு, தின்னனுார் நாடு, தெம்பளம், வாழவந்தி நாடு உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நெல் அறுவடை பணியில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.